வேச குமாரின் ஆறு அவதாரங்கள்
வேச குமார்: இதுதான் முதல் அவதாரம். இந்த பெயரில் எழுதத் தொடங்கியது காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதானதால் அல்லலுற்ற இந்துக்களுக்கு நம்பிக்கையூட்டவும், இசுலாத்தை தூற்றவும்.
இவர் வேறுயாருமல்ல. ஜெயில்மோகன்தான் என தமிழோவியர், துன்னை ஆகிய தமிழ் தளங்களில் எழுதி வரும் பிரபல எழுத்தாளர்களால் முகமூடி கிழிக்கப்பட்டவர். எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்கள்தான் இவரின் முதல் மாறுவேடத்தை அம்பலப்படுத்தியவர்.
ஸைபர் வெளியை அறிந்தருக்கும் வாசகன் எனும் அளவிலும், ஜெயமோகனது இலக்கிய எழுத்துக்கள், அவரது கருத்தியல் குறித்த எழுத்துக்கள, அவரது அரசியல் சர்ச்சைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் அளவிலும் ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து திண்ணையில் நேசகுமார் எனும் பெயரில் வந்த ஆதங்கக் கட்டுரை, அதனைத் தொடரந்து வந்த இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் ஜெயமோகனுடையதுதான் என நம்புவதற்கு இடமுண்டு.
இதுமட்டுமன்று சூர்யா எனும் பெயரிலும் பிற்பாடு சூரியா எனும் பெயரிலும் எழதுகிறவரும் ஜெயமோகன்தான் என்றும் தர்க்க அளவில் நான் நம்புகிறேன்.
இதனைத் தெளிவபடுத்துவதன் மூலம் என்ன பயன்? இதைச் சொல்வதற்கான தர்க்கம் என்ன? நியாயமான கேள்விகள். தமிழக இலக்கியச் சூழலில் ஒரு சிலர் தவிரவும் பெரும்பாலுமான எழுத்தாளர்கள் தொடர்ந்து ஸைபர் ஸ்பேசில் நடமாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. சூர்யா அல்லது சூரியா, நேசகுமார் போன்றவர்கள் ஸைபர் ஸ்பேசில் மட்டுமே நடமாடும் எழத்தாளர்கள்.
அவர்கள் சிறுபத்திரிக்கை சார்ந்து தெரிந்த எழுத்தாளர்கள் அல்ல. மேலாக ஜெயமோகனின் ஸைபர் ஸ்பேஸ் எழுத்தக்களின் கருத்தியல் சார்பாளர்களும் விசுவாசிகளும் இவர்கள் தான்.
ஜெயமோகனது பிரதிகளை விதந்தோதி வழிபடுபவர், எதிர்விணையாற்றுபவர்களை நக்கல் செய்பவர் வன்சொல் வீசுகிறவர் சூரியா எனும் நிழல் மனிதர். இவரது இதுவரைத்திய எழுத்துக்கள் அனைத்துமே ஸைபர் ஸ்பேஸ் சார்ந்தவைதான்.
தமிழகத்தில் அரைநூற்றாண்டுகாளக நடந்த அனைத்து இலக்கிய அரசியல் கருத்தியல் விவாதங்களை அறிந்த இவரை தமிழகத்திலுள்ள எழத்தாளர்கள் யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்கிறார்கள். இவர்; இதுவரை எழுதிய எழுத்துக்கள் தொண்ணாறு சதம் ஜெயமோகனது எழுத்துக்கள் எப்படிப் பாரக்கப்பட வேண்டும் என ஜெயமோகன் சொல்கிறாரோ அப்படியே பார்த்து அதை நிலைநாட்ட எழதும் எழத்துக்கள்தான்.
இவர் ஒன்று ஜெயமோகனது மூளையின் பகுதியாக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனது குளோனிங் ஆக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனிடம் அன்றாட குறிப்புகள் எடுத்துக்கொண்டு எழுதும் பிரச்சார எழுத்தாளராக இருக்க வேண்டும்.
அயோக்கியம்: இவரும் மோச குமார்தான் என்ற உண்மை வெளிப்பட சில நாட்கள் ஆன பிறகே அறிய முடிந்தது. இசுலாமியர்களை இந்து பெயரில் எதிர்த்தால், எதிர்வினை பிரச்சாரங்களால் இந்துக்களுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணம்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கனவே மோச குமார் என்ற பெயரில் ஓரளவு சம்பாதித்து வைத்திருக்கும் இந்து அபிமானத்தை இழக்காமல், உள்மனதில் கொட்டிக் கிடக்கும் வக்கிரங்களையும் இறக்கி வைக்க வேண்டும். எதிர் வினைகள் வந்தால் அது கிறித்தவத்திற்குப் போக வேண்டும். இதுதான் ஆரோக்கிய அவதாரத்தின் எண்ணம்.
எலிப்பாண்டி: தொடக்கத்தில் அயோக்கியம், மோச குமார் போன்ற பதிவில் கலந்துரையாடினார். பிறகு அயோக்கியத்துக்கு ஜால்ரா அடிப்பதோடு தனது பின்னூட்டங்களை குறைத்துக் கொண்டார். பிறகு அயோக்கியத்துடன் கருத்து வேறுபாடு என்று சமீபத்தில் பின்னூட்டமிட்டு வருகிறார். இவர் அணிந்திருக்கும் 'நாத்திகர்' வேசத்தில் இந்து மதத்தை ஆதரித்தும், முசுலிம்களை திட்டியும் வரும் வித்தியாசமான நாத்திகர்.
ஜீனொமினொ: இவர் ஆரம்ப காலங்களில் முசுலிம் வலைப்பதிவுகளில் மட்டும் உலா வந்தார். இடையிடையில் அயோக்கியத்தின் பதிவில் பிணாத்துவார். இவர் கேள்வி கேட்கும் பாணி மோச குமாரின் பாணி என்பதை பலரும் அறிந்த போதிலும், மோச குமாரின் தமிழ் இலக்கிய நடையிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒரே கேள்வியை பலவகையாகக் கேட்டு பதில் சொல்பவரை குழப்பி அல்லது பொறுமை இழக்கச் செய்து திசை திருப்ப வேண்டும் என்ற யுக்தி.
ஜீனொமினோ என்ற பெயர் ஆரம்பத்தில் சிலருக்கு குழப்பமாக இருந்த போதிலும், தன் சொந்த வலைப்பூவில் பிறப்பால் இந்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால் இவருக்கு இந்து மதத்திலிருந்து எந்த சந்தேகமும் வராதாம். ஏன் வரவில்லை என்றால், அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர் என்ற குருட்டு எதிர்வாதம்.
ஆரம்ப பின்னூட்டங்களில் இங்கிலீசில் பினாத்தினாலும் இவருக்குள் இருக்கு Split Personality அடிக்கடி தலை காட்டியது. இதனால் தமிழில் தவறுதலாக எழுதி கொஞ்சம் சந்தேகத்திலிருந்து விலகி இருக்க நினைத்தார். ஆனாலும் உள்ளிருக்கும் மோச குமார் Personality அவரை தமிழில் வெகு விரைவில் சரலமாக எழுத வைத்தது. கடைசியில் இவர் ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை அவரின் வத வத பின்னூட்டங்களாலும், விவாதிக்கும் முறையாளும் அடையாளம் காணப்பட்டு பெரும்பாலோரால் ஒதுக்கப்பட்டார்.
P.C. ஜோன்ஸ்: இவர் வேறு யாருமல்ல. அயோக்கியம் என்னதான் கிறித்தவர்களை திட்டினாலும், கிறித்தவ மிஷனரிகள் கும்பல் கும்பலாக மதமாற்றம் செய்கின்றார்கள் என்றாலும், வலியச் சென்று அயோக்கியத்தை விசுவாசிக்க எடுக்கப் பட்ட அவதாரம்.
Barashouko: இவர் இசுலாமிய மதத்திலிருந்து சமீபத்தில் வெளியேறியவராம்! அனேகமாக புத்தமத பெயரில் இருக்கும் பதிவர் இவர் மட்டும்தான் என நினைக்கிறேன். பாவம், இவர் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாததால் ஆங்கிலத்தில் மட்டுமே உதார் விடுவார். இவர் அதிகம் எழுத மாட்டார். ஆனால் 'நச்' சுன்னு மோச குமார் மாதிரி எழுதிவிட்டு போய் விடுவார்.
என்ன இதெல்லாம் ஏற்கனவே எழுதியும், பின்னூட்டமிட்டும் வரும் பதிவர்களை சுட்டுவது போலுள்ளதா? உண்மைதான் வலைப்புக்களில் தனி நபர்களை தாக்கி எழுதக் கூடாது என்ற வரைமுறை இருக்கிறது. ஆகவே தனிமனிதரை தாக்கக் கூடாது என்ற பாலிஸியை ஒப்புக் கொண்டு எழுதுகிறேன்.
அயோக்கியம், தமிழ்மணத்திலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா? என்று விளக்கிவிட்டு விலகி இருக்கலாம். இருந்தாலும் மேற்கண்ட ஏதாவது ஒரு அவதாரங்களில் இனி பின்னூட்டமிட்டும், கலக்கியும் வருவார் என்ற உறுதி மொழியை மட்டும் வைத்து அடுத்த பதிவுவரும் வரை காத்திருக்கவும்.
இப்படித்தான் அடிக்கடி நேரமில்லை, எழுத முடியவில்லை என்பார்.ஆனால் வெவ்வேறு பெயர்களில் மறக்காமல் வருவது இவர்தான். நல்லா இருக்கட்டும்.


