ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Wednesday, September 28, 2005

பேஷ்..பேஷ்..ரொம்ம்ம்ப நன்னாருக்கு..

உழைக்காமல் உண்டு கொழுக்கும் பிராமணர்கள் கடவுளுக்கு பூசை செய்கிறேன் என்று கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன் தெரியுமா? பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த பாவத்துக்காக?!!?! பூசை செய்து சாவதே பிராமணன் பணி என்று நினைத்திருந்தால் அந்த நினைப்பை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

முக்கிய கோவில்களின் "இன்றைய ஸ்பெஷல்" ஐயிட்டங்களைப் பார்த்தால் யாருக்குத்தான் பிராமணர் மேல் பொறாமை வராது?

பிள்ளையார்பட்டி - மோதகம்
பழனி - பஞ்சாமிர்தம்
திருப்பதி - லட்டு
காஞ்சீபுரம் - இட்லி
சுசீந்திரம் - வடை
வைரவன்பட்டி - புளியோதரை
பேரையூர் - சம்பா சாதம்
திருக்கருகாவூர் - சர்க்கரைப் பொங்கல்
ஆவுடையார் கோவில் - பாகற்காய் சாதம்
சிதம்பரம் - கற்கண்டு பொங்கல்
திருச்செந்தூர் - அரிசிப்புட்டு

எந்தக் கோயிலில் எந்தப் பிரசாதம் பிரமாதம்? இதோ சொல்கிறது தினத்தந்தி ஜோதிட மலர். கோயிலில் பார்ப்பனர் கொழுத்துப் போய் இருப்பதற்குக் காரணம் புரிகிறதா?

மேலும் இந்தக் கோயில்களில் இந்த பிரசாதம் கொடுக்க வேண்டிய காரணம் பற்றி நிச்சயம் ஒரு புராண கதை இருக்கும். ஆனால் நமக்கெல்லாம் தெரிந்த பெரிய புராணக் கதையில் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றிக் கறி படைத்தாரே! அதை சிவனும் ஏற்றுக் கொண்டு அருள் பாலித்தாரே! அப்படியானால் காளஹஸ்தி கோயிலில் பன்றிக் கறி பிரசாதம் கொடுப்பார்களா? அல்லது வருடம் ஒருமுறை பெரிய புராணத்தில் வருவது போல் விழா கொண்டாடி செய்யலாமே.

சீர்காழியிலே முலைப்பால் திருவிழா, காரைக்காலில் தங்க மாங்கனி திருவிழா, மதுரையிலே பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிழா, நரிகளை பரிகள் ஆக்கிய திருவிழா வரிசையில் காளஹஸ்தியில் பன்றிக்கறி திருவிழா ஏன் செய்யக் கூடாது?

பெரிய புராணத்தில் வரும் அந்தந்த ஜாதி நாயன்மார்களை அந்தந்த ஜாதியினர் கொண்டாட வேண்டுமென்று, தலைக்காவிரியில் . . . . . . வாங்கி, காஞ்சியில் சன்யாசம் வாங்கிய ஓடிப்போய் திரும்பி வந்த சங்கராச்சாரியார் சொன்னாரே, குறைந்த பட்சம் கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடத்தில் அவருடைய குலமான வேடுவ குலத்தையாவது கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி அளிப்பார்களா?

பதில் சொல்வாரா காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர்.

10 Comments:

  • At Thursday, September 29, 2005 1:47:00 AM, Blogger புலிப்பாண்டி said…

    //காளஹஸ்தி கோயிலில் பன்றிக் கறி பிரசாதம் கொடுப்பார்களா?//

    சரியான கேள்வி. பார்ப்பனர் டோண்டு மட்டுமே பதில் சொல்ல சரியான ஆள்.

     
  • At Thursday, September 29, 2005 2:43:00 AM, Blogger G.Ragavan said…

    எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கியங்களில் கோயில்களில் அசைவம் என்பது ஏற்கப்பட்டுள்ளதாகவே இருந்திருக்கிறது.

    முருகன் கோயிலில் கிடா வெட்டி, அந்தப் பிரசாதம் கொடுக்கப் பட்டதை நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். "கொழுவிடை குருதியொடு விரவிய செந்நெல்" என்று வரும் பாடலில் இது உள்ளது.

    முருகன் கோயில்கள் மட்டுமல்ல கொற்றவை, விரிசடைக் கடவுள், மால் ஆகியோடும் அசைவர்களாகவே இருந்திருப்பது அவர்களது கருப்பொருள்களிலிருந்து விளங்கும்.

    இன்றைக்கு இந்துக் கோயில்களில் பல சைவக் கோயில்களாக இருப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றமே.

     
  • At Thursday, September 29, 2005 10:15:00 AM, Blogger Aarokkiyam உள்ளவன் said…

    {இன்றைக்கு இந்துக் கோயில்களில் பல சைவக் கோயில்களாக இருப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றமே}

    ஒளிவு மறைவின்றி உண்மையை கண்ணியமாகச் சொன்னதற்கு நன்றி கோ.ராகவன் சார்

     
  • At Thursday, September 29, 2005 11:19:00 PM, Blogger G.Ragavan said…

    // ஒளிவு மறைவின்றி உண்மையை கண்ணியமாகச் சொன்னதற்கு நன்றி கோ.ராகவன் சார் //
    நன்றி ஆரோக்கியம் உள்ளவரே. நான் மனதறிந்து அப்படித்தான் சொல்கிறேன்.

     
  • At Friday, September 30, 2005 8:06:00 AM, Blogger neo said…

    ராகவன்,

    உண்மை என்னவென்றால் முருகன் தமிழர்களின் ஆதிப் பழங்குடியின காலத்திலிருந்தே வணங்கப்படும் தலைவன்.

    'வேலன் வெறியாட்டு்' என்பது மிகப் மிகப் பண்டைய தமிழ்க்குடியின் வழிபாட்டு முறை. இப்போதைய 'கிடாவெட்டுதல்' என்பது அந்தப் பண்டைய முறையின் ஒரு மருவலே.

    கடைச்சங்க காலம் வரை பார்ப்பனீயக் கூறுகள் தமிழர்களின் வாழ்க்கை, வழிபாட்டு நம்பிக்கைக் கூறுகளில் நுழைய முடியவில்லை. அதன் இறுதிக் கட்டத்தில்தான் பார்ப்பனர்கள் தங்கள் ஆரியக் கருத்துகளை அரசர்கள் மூலமாக புகுத்த முனைந்தனர்.

    எனினும், 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு வரை பொதுமக்களின் வாழவிலே பார்ப்பனீயக் கொள்கைகள் பரவவில்லை.

    பல்லவர்களும், பிறகு பிற்காலச் சோழர்களுமே பார்ப்பனர்களுக்கு வழிபாட்டு முறைகளில் ஆதிக்கம் செலுத்த அனுமதி தந்து தமிழ் மக்க்களின் ம்ஈது வருணம் பரவ காரண்மாயினர்.

    15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, கிருஷ்ணதேவராயர் காலத்தில் வடமொழியும், பார்ப்பனீயமும் தலைவிரித்து ஆடத் தொடங்கின தமிழகத்தில்.

    இசை, வழிபாடு, கல்வி, ஆட்சிமுறை எல்லாவற்றிலும் - பார்ப்பனர்கள் உயர்த்தப்பட்டது கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான்.

    ஈராயிரம் ஆண்டுகளாய்க் காலைச் சுற்றிய பாம்பாய் இருக்கும் பார்ப்பனீயம் (பார்ப்பனர் அல்லர்) ஒழிகிற நாளே தமிழகத்தில் மீண்டும் பொற்காலம் மலரும்.

     
  • At Friday, September 30, 2005 8:22:00 PM, Anonymous Anonymous said…

    எனக்குத் தெரிந்து எலும்பில்லாமல் தனிக்கறியாக வாங்கிச் சென்று சமைத்து உண்ணும் பிராமனர்களைச் சந்தித்து இருக்கிறேன். முள்ளில்லா மீன்களை வாங்கிச் சென்று வறுவல் செய்து தண்ணியுடன் ருசிக்கும் பார்ட்டிகளோடு பேசி இருக்கிறேன். முட்டையை சைவத்தில் சேர்த்தாகிவிட்டதென மார்த்தட்டிச் சொன்ன பார்ப்பனர்களைச் சந்தித்தும் இருக்கிறேன்.

    ஆனால் இவை அனைத்தும் கோவிலுக்கு வெளியே. ஆனால் உள்ளே செல்பவர்கள் புலால் உண்ண மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஆனால் தட்டில் காசு போடும் பழக்கம் அதிகரித்து விட்டது. முன்னெல்லம் போட்டால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது மிரட்டிப் பறிக்கிறார்கள்! பிரசாதமாக இறைவனுக்குக் காட்டப்படும்(!!!) உணவு கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அமோக விற்பனையாகின்றன.

    கோ.ராகவன் அவர்கள் கூறுவது உண்மை. அதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

    தீவிரவாதிப் பார்ப்பனர் டோண்டு வந்து இதற்கெல்லாம் பதில் சொல்வார் என்று புலிப்பாண்டி அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அவர் வந்தால் சோவை ஆதரித்து நான்குவரி. பிராமணீயத்த�

     
  • At Friday, September 30, 2005 8:24:00 PM, Anonymous Anonymous said…

    எனக்குத் தெரிந்து எலும்பில்லாமல் தனிக்கறியாக வாங்கிச் சென்று சமைத்து உண்ணும் பிராமனர்களைச் சந்தித்து இருக்கிறேன். முள்ளில்லா மீன்களை வாங்கிச் சென்று வறுவல் செய்து தண்ணியுடன் ருசிக்கும் பார்ட்டிகளோடு பேசி இருக்கிறேன். முட்டையை சைவத்தில் சேர்த்தாகிவிட்டதென மார்த்தட்டிச் சொன்ன பார்ப்பனர்களைச் சந்தித்தும் இருக்கிறேன்.

    ஆனால் இவை அனைத்தும் கோவிலுக்கு வெளியே. ஆனால் உள்ளே செல்பவர்கள் புலால் உண்ண மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஆனால் தட்டில் காசு போடும் பழக்கம் அதிகரித்து விட்டது. முன்னெல்லம் போட்டால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது மிரட்டிப் பறிக்கிறார்கள்! பிரசாதமாக இறைவனுக்குக் காட்டப்படும்(!!!) உணவு கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அமோக விற்பனையாகின்றன.

    கோ.ராகவன் அவர்கள் கூறுவது உண்மை. அதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

    தீவிரவாதிப் பார்ப்பனர் டோண்டு வந்து இதற்கெல்லாம் பதில் சொல்வார் என்று புலிப்பாண்டி அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அவர் வந்தால் சோவை ஆதரித்து நான்குவரி. பிராமணீயத்த�

     
  • At Friday, September 30, 2005 8:28:00 PM, Anonymous Anonymous said…

    எனக்குத் தெரிந்து எலும்பில்லாமல் தனிக்கறியாக வாங்கிச் சென்று சமைத்து உண்ணும் பிராமனர்களைச் சந்தித்து இருக்கிறேன். முள்ளில்லா மீன்களை வாங்கிச் சென்று வறுவல் செய்து தண்ணியுடன் ருசிக்கும் பார்ட்டிகளோடு பேசி இருக்கிறேன். முட்டையை சைவத்தில் சேர்த்தாகிவிட்டதென மார்த்தட்டிச் சொன்ன பார்ப்பனர்களைச் சந்தித்தும் இருக்கிறேன்.

    ஆனால் இவை அனைத்தும் கோவிலுக்கு வெளியே. ஆனால் உள்ளே செல்பவர்கள் புலால் உண்ண மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஆனால் தட்டில் காசு போடும் பழக்கம் அதிகரித்து விட்டது. முன்னெல்லம் போட்டால் வாங்கிக் கொள்வார்கள். இப்போது மிரட்டிப் பறிக்கிறார்கள்! பிரசாதமாக இறைவனுக்குக் காட்டப்படும்(!!!) உணவு கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அமோக விற்பனையாகின்றன.

    கோ.ராகவன் அவர்கள் கூறுவது உண்மை. அதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

    தீவிரவாதிப் பார்ப்பனர் டோண்டு வந்து இதற்கெல்லாம் பதில் சொல்வார் என்று புலிப்பாண்டி அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அவர் வந்தால் சோவை ஆதரித்து நான்குவரி. பிராமணீயத்த�

     
  • At Friday, September 30, 2005 8:32:00 PM, Blogger மத்தளராயன் said…

    தீவிரவாதிப் பார்ப்பனர் டோண்டு வந்து இதற்கெல்லாம் பதில் சொல்வார் என்று புலிப்பாண்டி அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அவர் வந்தால் சோவை ஆதரித்து நான்குவரி. பிராமணீயத்தினை ஆதரித்து 10வரி எழுதுவார். அவரின் எழுத்துக்கும் இந்த ஆக்கத்திற்கும் சத்தியமாக சம்பந்தமே இருக்காது!!! லூசுத்தனமாக ஏதாவது உளறுவார்!

     
  • At Saturday, October 01, 2005 3:01:00 AM, Blogger asalamone said…

    AIYYAH.

    EVVALAU CORRECT YA REPORT YELLAM TAMIL SUVADIHALIL ERUKKIRADAA AIYYAH. AAROKIAM ULLAVARE.

    SARIYAANA AAL THAN NEER.

    Asalamone
    Bahrain

     

Post a Comment

<< Home